இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளும் ராஜபக்சேவின் குடும்பத்தினரே காரணம் என அங்கு ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் போராட்டம் என்ற சூழலில், மறுபக்கம் உணவு தட்டுப்பாடு அங்கு தலை விரித்து ஆடுகிறது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில், 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், 137 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் கப்பல் மூலம் இன்று இலங்கை செல்கிறது.சென்னை துறைமுகத்தில் நிவாரண பொருட்கள் கப்பலை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…