புல்லட் பைக் வாங்க மனைவியின் நகையை கணவனே திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த அப்துல் ராஷித் என்பவர் அதே பகுதியில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25 ம் தேதி மனைவி வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது பிரோவில் வைக்கப்பட்டிருந்த 17 சவரன் நகை திருடு போயுள்ளது. இதனால் அதிர்சியடைந்த அவள், தன் பாசக்கார கணவனுடன் சென்று எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதில் அப்துல் ராஷித் பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் ஏதும் இல்லை என்பது உறுதியானது. அதே வேள்லையில், அப்துல் ராஷித் புதிதாக புல்லட் பைக் வாங்கியதை அறிந்த காவல்துரையினர். அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது புல்லட் பைக் மீதான அதீத மோகத்தால் மனைவியின் நகையை திருடி அதில் கிடைக்கும் பணத்தை வைத்து புல்லட் பைக் வாங்கியதாக தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் இரண்டு பேரையும் சேர்த்து காவல்துறையினர் கைது செய்தனர். கேட்டாலே கொடுக்கும் மனைவியிடமே கணவன் திருடிய சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…