போர்க்களத்தில் உயிரிழக்கும் வீரர்களின் எண்ணிக்கையை சரிசெய்யும் விதமாக சிறைக்கைதிகளின் உதவியை ரஷ்யா நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 150 வது நாளை கடந்து இன்னும் உக்கிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்யா - உக்ரைன் என இரு தரப்பிலும் பலத்த சேதம் ஏற்ப்பட்டுள்ளது. போரில் உக்ரைனில் உள்கட்டமைப்பு முழுவதுமாக சேதமடைந்துள்ளது. ஆனால் ரஷ்யா தரப்பில் ஏராளமான வீரர்கள் பலியாகியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் போர் வீரர்களை ஈடுசெய்யும் வகையில் ரஷ்யாவில் சிறையில் உள்ள கைதிகளை உக்ரைன் களத்துக்கு ரஷ்யா அனுப்பி வைக்கவுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.
அவ்வாறு போர் களத்திற்கு செல்லும் கைதிகள் ஒருவேளை உயிரிழந்து விட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு சுமார் 70 லட்சம் வழங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது. சிறையில் கைதிகளாக உயிரிழப்பதை காட்டிலும், போருக்கு செல்லாலம் என கைதிகள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…