இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவின் சக்தி வாய்ந்த உளவு கப்பல் இன்று இலங்கை வரவுள்ளதையொட்டி இந்திய கடற்படை அதி உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சக்தி வாய்ந்த யுவான் வனக் 5 என்ற உளவுக்கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்ட துறைமுகத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியான உடனே இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்தது. மேலும் இலங்கைக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த வந்தது. இந்நிலையில் திட்டமிட்டப்பட சீனாவின் உளவுக்கப்பல் இன்று இலங்கை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னை மற்றும் கடலோர மாநிலங்களில் உள்ள ரேடார்கள் மூலமாக கடற்பகுதிகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள இந்திய படைகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சீனா எல்லை அருகே, உத்ரகாண்ட் பகுதியில் இந்தியா - அமெரிக்கா படைகள் இணைந்து பிரம்மாண்ட போர் பயிற்சியில் ஈடுபட போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த போர் பஇர்சி வருடந்தோறும் நடைபெறுவது தான் என கூறப்படுகிறது. ஏற்கன்வே சீனா தைவான் கடற்பரப்பில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்கா, இந்திய படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…