Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஷம் வைத்து 45 குரங்குகள் கொடூரக் கொலை...ஆந்திராவில் பயங்கரம்!

Priyanka Hochumin October 26, 2022 & 11:25 [IST]
விஷம் வைத்து 45 குரங்குகள் கொடூரக் கொலை...ஆந்திராவில் பயங்கரம்!Representative Image.

ஆந்திரா மாநிலத்தில் சுமார் 45 குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சிலகம் கிராமத்திற்கு அருகில் இருக்கும் வனப்பகுதில் துர்நாற்றம் அடித்ததால் அப்பகுதி மக்கள் போய் பார்வையிட்டனர். பார்த்தால் குட்டிகள் உட்பட 45 குரங்குகள் இறந்து கிடந்துள்ளது. அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல், வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் குரங்குகளின் உடலை கைப்பற்றி, கால் நடை மருத்துவரின் உதவியுடன் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

சிலகம் கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த குரங்குகள் இந்த வனத்தை சேர்ந்தவர்கள் கிடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். எனவே, வேற இடத்தில இந்த குரங்குகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டு, அவர்களுக்கு சந்தேகம் வராத மாறி வாகனம் மூலம் குரங்குகளை இங்கே போட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகப்படுகின்றனர். மேலும் இதற்கு காரணமாக இருந்த குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்