சமீபத்தில், விஷால் தனது காசி பயணம் குறித்து ட்வீட் செய்த நிலையில், தற்போது அதற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், நடிகர் விஷால், அவரது குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றிருக்கிறார். பின்னர், இது குறித்து, தனது சமூக வலைதள பக்கத்தில், “அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. காசியில் புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் கிடைத்தது. காசியின் கோவிலைப் புதுப்பித்து, எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” என விஷால் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்தார்.
இதனிடையே, நடிகர் விஷார் பாஜகவில் சேர உள்ளதாகவும், இந்த காரணத்திற்காகவே பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது. இதற்கு நடிகர் விஷால்,”நான் மட்டுமல்ல.. காசுக்கு யார் சென்று பார்த்தாலும் அங்கு கோவில்கள் புனரமைத்திருக்கும் விகிதத்தைப் பார்த்தால், எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள். அப்படித்தான் நான் என் உணர்வுகளைப் பதிவிட்டேன். இதில் அரசியல் எதுவும் இல்லை. ஆன்மீக பயணத்தை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஷாலின் பதிவுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். விஷால் நன்றி தெரிவித்த பதிவைப் பகிர்ந்த பிரதமர்,”காசியில் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி” என பதிலளித்துள்ளார்.
நடிகர் விஷால் ட்வீட்டுக்கு, பிரதமர் மோடி பதில் அளித்துள்ளது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Most Read: மத்திய அரசு அளிக்கும் தமிழ்நாடு To காசி இலவச பயணம்..! எப்படி பதிவு செய்வது?
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…