எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும், சந்திரசேகர் என்பவரின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை : நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும், சந்திரசேகர் என்பவரின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு முறை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில்,தற்போது 3-வது முறையாக சந்திரசேகருக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனையிட்டு வருகின்றனர்.
இதனைதொடர்ந்து சோதனை முடிவிலையே அவரது வீட்டில் என்னென்ன ஆவனங்கள் கைப்பற்றப்பட்டன என தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2016 முதல் 20220 வரையிலான அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுமார் 56 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்தாக எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…