உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதித்து ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு சுமையை ஏற்ப்படுத்தும், அரிசி, தயிர் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மீதான வரிவிதிப்புக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்..? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொண்டு வரி உயர்வுக்கு எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யாத திமுக அரசை கண்டிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…