சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று கோலகலமாக துவங்கவுள்ளதால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகள் பங்கேற்கின்றனர். இதில் 30 வீரர்களை கொண்டு 6 அணிகளாக இந்தியாவும் களமிறங்குகிறது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது.
இந்நிலையில் போட்டியை துவங்கி வைக்க இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை வருகிறார். போட்டியை துவக்கி வைத்த அவர் இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். மேலும் நாளை சென்னை அண்ணா பல்கலைகழக 42 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சுமார் 69 பேரு தங்க பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கவுள்ளார். பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி சென்னையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், ரயில் நிலையம், மக்கள் நடமாடும் முக்கிய இடங்களில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…