இந்தியாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அதில் இருந்து குணமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஒருவர் அந்த நோயில் இருந்து குணமடைந்துவிட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 35 வயதான அந்த நபர் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார் என்றும், தோல் புடைப்புகள் விரைவில் குணமாகும்" என்று அவர் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…