வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கு எதற்காக கூச்சப்பட வேண்டும். உண்மையில், நம்மிடம் எவ்வளவு காசு, பணம் இருந்தாலும் மனதிற்கு பிடித்த செய்யும் போது அதிலிருந்து கிடைக்கும் சந்தோசமே தனி.
அதுபோல, எல்லோருக்குள்ளேயும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும், அது பெரியவர்கள் ஆனாலும் நம்மை விடாது. உதாரணமாக, கடலை மிட்டாய், தேன் மிட்டாய், பஞ்சு மிட்டாய், தேங்காய் பர்பி போன்ற பள்ளிப்பருவத்தில் சாப்பிட்ட தின்பண்டங்களை சிறியவர்களை விட பெரியவர்கள் தான் தேடி தேடி வாங்கி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில், 36000 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரரான இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ராகுல் பாட்டியா தனது சொந்த இண்டிகோ விமானத்தில் செல்லும்போது யார் பார்த்தால் எனக்கென்ன என்று சின்ன பிள்ளைப்போன்று பார்லே-ஜி பிஸ்கட்டை டீயில் தொட்டு சாப்பிட்டு கொண்டிருந்த செயல் புகைப்படமாய் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
என்னதான் கோடீஸ்வரனாக இருந்தாலும், சக பயணிகள் உட்காரும் சீட்டில் உட்கார்ந்து கொண்டு பெங்களூரில் இருந்து டெல்லிக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் இவர் செய்த குழந்தைத்தனம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது. கோடீஸ்வரனுக்குள்ளேயும் ஒரு குழந்தைத்தனம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…