இந்தூரில், நான்கு சிறுமிகள் குடிபோதையில் மற்றொரு பெண்ணை சரமாரியாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள எல்ஐசி திராஹாவில் கடந்த வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், நான்கு சிறுமிகள் தகராறு செய்வதுடன், ஒரு பெண்ணை சரமாரியாக அடித்தவாறு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நான்கு சிறுமிகளும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் சாலையில் இருந்த சிறுமியின் மொபைலை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இது குறித்து, புகார் எதுவும் வரவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அந்த சிறுமிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே போல, அந்தப் பகுதியில் கூடியிருந்த பார்வையாளர்கள் சிறுமிகள் செய்த தகராறை வீடியோ எடுத்தனரே தவிர, சண்டையை நிறுத்த தலையிடவில்லை. மூன்று சிறுமிகள் சேர்ந்து ஒரு சிறுமியை கொடூரமாக அடித்து உதைத்தது போல வீடியோவில் வெளிவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…