உளவு பார்த்ததாக கூறி இங்கிலாந்து தூதரக அதிகாரியை ஈரான் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு ஓபாமா ஆட்சியில், ஈரான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. இந்த ஒப்பந்தம் மூலம் ஈரான் அணு ஆயுத தயாரிப்பை தடுக்கும் முடியும் என கூறப்பட்டது. இதனையடுத்து கடந்த டொனால்ட் டிரம்ப் ஆட்சியில், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. இதனைதொடர்ந்து தற்போது பொறுப்பேற்றுள்ள பைடன் தலைமையிலான அமெரிக்கா மீண்டும் இந்த ஒப்பந்ததில் இனைய ஆர்வம் காட்டி வருகிறது. இது தொடர்பான பேச்சு வார்த்தை கத்தார் தலைநகரில் நடைபெற்றது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அமெரிக்கா, ஈரான் மாறி, மாறி குற்றம் சாட்டி வந்தது.
இந்நிலையில், அணுசக்தி தளங்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஈரான் துண்டிததாக கூறப்படுகிறது. மேலும், ஈரானிடம் உள்ள யுரேனியத்தை கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியும் என மேற்கத்திய நாடுகள் கூறி வருகின்றன. இந்த நிலையில் தான், தடை செய்யப்பட்ட பகுதிகளில், மண் மாதிரிகளை சேகரித்தது, சட்ட விரோத உளவு வேலைகளில் ஈடுபட்டதாக ஈரானில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தின் மூத்த அதிகாரியை, ஈரானின் புரட்சி படை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…