உலகின் மிகப்பெரிய தேடு பொறி தளமான கூகுள் முடங்கியுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
உலகளவில் மிகப்பெரிய தேடுபொறி இணையதளமாக கூகுள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி சுமார் 40 ஆயிரம் பயனாளர்களுக்கு கூகுள் முடங்கியுள்ளதாக Downdetector.com என்ற செயலிழப்பு கண்காணிப்பு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு கூகுள் வேலை செய்தாலும் அவர்கள் புகைப்படங்களை டவுன்லோட் செய்யும் போது சிரமத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதனால் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியாமல் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆல்பாபெட் இன்க் (Alphabet Inc) நிறுவனத்திற்கு சொந்தமான கூகுள் இதுதொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. உலகளவில் கூகுள் முடங்கியுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…