இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனங்கள் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ளன. இந்நிலையில், சீனாவின் யுவான் வாங் - 5 கண்காணிப்புக் கப்பலின் இலங்கை துறைமுக வருகை தருவதாக தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக சீன கப்பல் வருகை இந்திய பெருங்கடல் பகுதியில் அச்சுறுத்தலாக இருக்கலாம் என இந்தியா தெரிவித்தது.
இதனையடுத்து, அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் தனது எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, சீரமைப்பு பணிகளுக்காக முதன்முறையாக அமெரிக்க கப்பற்படை கப்பல் சார்ல்ஸ் ட்ரூ இந்தியா வந்துள்ளது. இந்த கப்பல் குறைந்தது 11 நாட்களுக்கு சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அமெரிக்க கப்பல் இந்தியா வந்தது சீனாவுக்கு போட்டியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…