ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட். விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. DSEO என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
இதன் காரணமாக பழவேற்காடு பகுதி மீனவர்கள் யாரும், கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம், பொன்னேரி மீன்வளத்துறையினர் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…