இத்தாலி பிரதமர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகி அவர்களின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த மூன்று கூட்டணி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து இத்தாலியில் நிலையற்ற அரசியல் சூழல் நிலவி வந்தது. இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லாவிடம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து மத்தரெல்லா பாராளுமன்றத்தை கலைப்பாரா அல்லது முன்கூட்டியே தேர்தலை நடத்துவாரா என்பது குறித்து ஜனாதிபதி அலுவலகம் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…