இத்தாலி பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாலி நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் ஆளும் கூட்டணி கட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணியில் உள்ள பெரியக் காட்சிகளில் ஒன்றான பைவ் ஸ்டார் மூவ்மெண்ட் கட்சி அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதன் காரணமாக ஆளும் கூட்டணி ஆட்சி கவிழும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இத்தாலி பிரதமர் மரியோ டிராகி பதவியை ராஜினாம செய்வதாக அறிவித்தார். இருந்த போதிலும் அந்த ராஜினாமாவை இத்தாலி அதிபர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் பிரதமர் ராஜினாமா, ஜப்பான் முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை, இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்புக்கு அடுத்தபடியாக இத்தாலி பிரதமர் ராஜினாம செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…