கலவரம் தொடர்பாக டெலிகிராம் நிறுவனம் மீது சிறப்பு புலனாய்வு குழு குற்றம் சட்டியுள்ளது.
கள்ளக்குறிச்சி கலவர விவகாரம் தொடர்பான விசாரணை டெலிகிராம் நிறுவனம் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என மாணவி இறப்பு, கலவரம் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது. கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டவர்களின் விவரங்களை டெலிகிராம் நிர்வாகம் தர மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப், முகநூல் நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில் டெலிகிராம் நிறுவனம் மட்டும் வழங்கவில்லை என சிறப்பு புலனாய்வு குழு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் கலவரம் தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்திற்கு தமிழக காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…