Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுவாதி கொலை.. தாயின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!!

Sekar September 22, 2022 & 17:59 [IST]
சுவாதி கொலை.. தாயின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!!Representative Image.

சென்னையின் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட பொறியாளர் சுவாதியின் பெற்றோர் இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால் சிறையில் ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சுவாதியின் தங்களின் மகள் சுவாதி இறப்புக்கு ரூ.3 கோடி இழப்பீடு கோரி சுவாதியின் தாயார் ரங்கநாயகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ரயில்வே நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு படையின் அலட்சியத்தால் தான் தனது மகள் உயிரிழந்ததாக ரங்கநாயகி தனது மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கும் நிலையில், சுவாதியின் கொலை திட்டமிட்ட சம்பவம் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து சுவாதி வழக்கில் இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்