கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் மேலும் 2 பேர் சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் காவல் நிலையத்திற்குட்பட்ட கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். இன்று மேற்படி வழக்கினை புலனாய்வு செய்யும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் கலவரத்தின்போது பள்ளி சொத்துக்களை உடைத்து சேதப்படுத்திய 1. சந்தோஷ் (22) த.பெ. சின்னையன் உடையார்தெரு, ஏர்வாய்பட்டினம், கள்ளக்குறிச்சி மாவட்டம். 2. நவீன்குமார் (21) த.பெ. பாபு, பிள்ளையார் கோவில் தெரு. சு. பள்ளிப்பட்டு, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆகியோரை சம்பவத்தின்போது பதிவான வீடியோ காட்சியினை வைத்து அடையாளம் கண்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…