பேருந்துகளில் பெண் பயணிகளை ஆண்கள் முறைத்து பார்த்தால் அவர்களை கைது செய்ய, தமிழக மோட்டார் வாகன சட்டத்தில் தமிழக புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளது.
பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு ஆண்களால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து தடுப்பதற்காகவும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மோட்டார் வாகன விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.
அதன்படி, இனி பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது. கூச்சலிடக்கூடாது, விசிலடிக்க கூடாது. மேலும் பெண் பயணியிடம் ஆண்கள் அத்துமீறல் செய்தால் சம்பந்தப்பட்ட ஆண் பயணியை வாகனத்தில் இருந்து இறக்கிவிடலாம்.
நடத்துனர் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்க நடத்துனரு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண் பயணிகள் கூச்சலிடுதல், கண் அடித்தல், விசில் அடித்தல், சைகை உள்ளிட்டவற்றை செய்யக் கூடாது என பல்வேறு அறிவுறுத்தல்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…