கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் 4 பேர் காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி வன்முறையில், ஈடுபட்டவர்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக இதுவரை 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களில் 4 பேர் காவல்நிலையம் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாகவும், அவர்களில் 3 பேருக்குக் கையிலும் ஒருவருக்குக் காலிலும் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகப் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர், ஆசிரியர்கள் 2 பேர் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…