Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கள்ளக்குறிச்சி வன்முறை:- கழிவறையில் வழுக்கி விழுந்து 4 பேர் காயம்

Bala July 19, 2022 & 11:12 [IST]
கள்ளக்குறிச்சி வன்முறை:- கழிவறையில் வழுக்கி விழுந்து 4 பேர் காயம்Representative Image.

கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் 4 பேர் காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கள்ளக்குறிச்சி வன்முறையில், ஈடுபட்டவர்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  முதற்கட்டமாக  இதுவரை 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில்  அவர்களில் 4 பேர் காவல்நிலையம் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாகவும், அவர்களில் 3 பேருக்குக் கையிலும் ஒருவருக்குக் காலிலும் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும், பள்ளி மாணவி உயிரிழந்த  விவகாரம் தொடர்பாகப் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர், ஆசிரியர்கள் 2 பேர் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்