Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளை உள்ளூர் விடுமுறை; இவங்களுக்கு மட்டும் தான்!

Bala July 05, 2022 & 11:15 [IST]
நாளை உள்ளூர் விடுமுறை; இவங்களுக்கு மட்டும் தான்! Representative Image.

கன்னியாகுமரி திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் சிறப்பு வாய்ந்தவை. இந்நிலையில் 418 ஆண்டுகளுக்கு பிறகு நாளை அக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெறுவுள்ளது. ம்ேலும் கும்பாபிஷேகத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால், நாகர்கோயில், மார்த்தாண்டம், குலசேகரம், அழகிய மண்டபம், தக்கவலி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படுகின்றன. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, வரும் 6-ம் தேதி (நாளை )கன்னியாகுமரி மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்