Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மதுரையில் மாஜி அமைச்சர் போராட்டம்:- 200 பேர் கைது...!

Bala July 04, 2022 & 19:01 [IST]
மதுரையில் மாஜி அமைச்சர் போராட்டம்:- 200 பேர் கைது...!Representative Image.

மதுரையில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி போராட்டம் செய்த முன்னாள் அமைச்சர் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விதிப்படி 60 கி.மீ ஒருவர் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும், ஆனால் மதுர கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மதுரை - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி, அப்பகுதி  மக்கள், மற்றும் வாகன் ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே திறந்த வெளியில் முன்னாள் அமைச்சர், ஆர்.பி. உதயகுமார் டோல்கேட்டை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். ஐயப்பன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன், கப்பலூர் தொழில்பேட்டை பேட்டை தலைவர் ரகுநாதராஜா, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலாளர் செல்வம், பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் அதிமுக தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்பி.உதயகுமார், அதிமுகவின் 200 பேரை கைது செய்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்