கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்ததால், இரு சிறுநீரகமும் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அந்த மாணவன் உயிரிழந்துள்ளான்.
கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்பல் அருகே அதங்கோடு எனும் பகுதியை சேர்ந்த மாணவன் அஸ்வின் பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்துள்ளான்.
அப்போது அங்கு வந்த உடன் படிக்கும் மாணவன் ஒருவன் அஸ்வினுக்கு குளிர்பானத்தை கொடுத்துள்ளான். அஸ்வினும் அதை குடித்து விட்டு வீட்டிற்கு சென்ற நிலையில், அஸ்வினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அஸ்வினை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் பரிசோதித்ததில் ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்ததால் இரு சிறுநீரகமும் செயல் இழந்தது தெரியவந்தது. பின்னர் போலீசில் இது குறித்து பெற்றோர் புகாரளித்தனர்.
இதற்கிடையே மாணவனுக்கு உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
14 நாட்களாக உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுவன் அவன் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…