Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிதறிக் கிடந்த எலும்புகள்.. கேரள நரபலியை அடுத்து குமரியில் நடந்த அதிர்ச்சி!!

Sekar [IST]
சிதறிக் கிடந்த எலும்புகள்.. கேரள நரபலியை அடுத்து குமரியில் நடந்த அதிர்ச்சி!!Representative Image.

கன்னியாகுமரி மாவட்டம் சுஷீந்தரம் அருகே காட்டில் மனித எலும்புகள் சிதறிக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் மறைவதற்குள் தற்போது அடுத்த அதிர்ச்சியாக கன்னியாகுமரியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுஷீந்தரத்தை அடுத்த சோளத்தட்டு அணைக்கட்டு பகுதியில், ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் எலும்புகள் மற்றும் உடல் பகுதிகள் ஆங்காங்கு சிதறிக் கிடந்துள்ளன.

ஆடு, மாடு மேய்த்தவர்கள் இதை பார்த்துவிட்டு சுஷீந்தரம் போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், போலீசார் வந்து எலும்புகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்