கனியாமூரில் கலவரம் ஏற்ப்பட்ட சக்தி மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வழியாக வகுப்புகள் தொடங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் பள்ளி ஒன்றில் மாணவி தற்கொலை செய்து கொண்டடதையடுத்து அப்பகுதியில் கலவரம் ஏற்ப்பட்டது. இந்த கலவரத்தின் போது பள்ளியில் உள்ள பொருட்கள் சூறையாடப்பட்டது. இதனையடுத்து அப்பள்ளி மாணவர்களின் கல்வி தொடர்பாக ஆட்சியர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சக்தி பள்ளி மாணவர்களின் கல்வி தடை படக்கூடாது என்பதற்காக ஜூலை 27 முதல் (இன்று) ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்தார். அதன்படி இன்றைய தினம் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளது.
மேலும், தற்போது மூடப்பட்டுள்ள பள்ளிக்கு அருகிலேயே 3க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கவும், பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் அனைவரின் கருத்துக்களும் கேட்கப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…