மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்க மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகளிடையே தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும், இதற்காக தனி பாட வேளை ஒதுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்க மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனத்தை சென்னை, அசோக் நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…