காஷ்மீரில் போலீஸ் எஸ்.ஐ-யை தீவிரவாதிகளின் குண்டு வீசி கொண்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
காஷ்மீரின் குல்ஹாம் மாவட்டத்தில் உள்ள கொய்மா பகுதியில் நேற்று இரவு காவல் உதவி ஆய்வாளர் தஹீர் கான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த தீவிரவாதிகள், அவர் மீது கையெறி குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடினர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காவல் ஆய்வாளரரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய தீவிரவாதிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
காஷ்மீரில் அடுத்தது அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது அங்கு ஒருவித அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…