மூணாறு அருகே ஏற்ப்பட்ட நிலச்சரிவு காரணமாக கடைகள் மண்ணில் புதைந்ததன.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மழை காரணமாக கேரளாவில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலைடில் கேராளா மாநிலம் மூணாறு அருகேயுள்ளா புதுக்குடி தோட்டம் பகுதியில் கனமழை காரணமாக 200 ஏக்கர் நிலப்பரப்பில் கடும் நிலச்சரிவு ஏற்ப்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாஅக ஒரு கோவில், 2 கடைகள் மண்ணில் புதைந்தது. இருந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 450க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மூணாறு அருகே பெட்டிமுடி பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தவுள்ள நிலையில் மீண்டும் அதே பகுதியில் நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…