உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மாத இறுதியில் தமிழகத்திற்கு வரவுள்ளதாக பாஜக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். போட்டியை துவக்கி வைத்த பின்னர் ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் பாஜகவின் தமிழக தலைகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மாத இறுதியில் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் வரும் அவர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்டு வரும் பாஜக அலுவலகங்களை திறந்து வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேற்பார்வையாக இது கூறப்பட்டாலும், அமித்ஷா கோவை வரும் அன்றைய தினம் பாஜகவின் முக்கிய தலைகள் கண்டிப்பாக கோவை வரவேண்டும் என உத்தரவு பறந்துள்ளது.
கோவை வரும் அமித்ஷா, 2024ம் ஆண்டு லோக்சாபா தேர்தல் தொடர்பாக விவாதிக்க உள்ளதாகவும், சிறிய ஜாதி கட்சிகளுடனான கூட்டணி, திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை தூசி தட்டுதல் போன்றவை விவாதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் பாஜகவினர் சிலர் அண்ணாமலையின் தலைமையை ஏற்க மறுப்பதால் அவர்களை சமாதானப்படுத்தி ஒரு குடையின் கீழ் கொண்டு வர முயற்சியும் எடுக்கப்படவுள்ளதாம்.
மேலும், முக்கியமாக அதிமுக பிரச்சனை குறித்து முக்கியமாக விவாதிக்கவுள்ளதாகவும், அமித்ஷா வந்து சென்ற பின்னர், அதிமுகவில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…