இந்தியாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலை ஐரோப்பிய நாடுகளை குரங்கு அம்மை பாதிப்பு மிரட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பாதிப்பு ஏற்படாமல் இருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு சில நாட்களுக்கு முன்னர் குரங்கம்மை பாதிப்பு உறுதியானது. இந்நிலையில், துபாயிலிருந்து கண்ணூர் வந்த 31 வயது நபருக்கும் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கூறினார். பாதிப்பு உறுதியானவருடன் தொடர்பில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்றும், விமான நிலையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதார அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…