Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

போராட்டம் வாபஸ்...அடுத்த கட்ட நடவடிக்கை இது தான்..அமைச்சர் கொடுத்த அப்டேட்..!

Bala July 18, 2022 & 18:15 [IST]
 போராட்டம் வாபஸ்...அடுத்த கட்ட நடவடிக்கை இது தான்..அமைச்சர் கொடுத்த அப்டேட்..!Representative Image.

தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் ஏற்ப்பட்ட கலவரம் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் உடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்புனர் நடத்திய சந்திப்பை அடுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

இதனையடுத்து கணியாமூர் பள்ளியை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு ;  எந்த அமைப்பாக இருந்தாலும் முறையான போராட்ட அணுகுமுறையை கையாண்டிருக்கலாம் என்றும், கலவரத்தில் ஈடுப்பட்டவர்கள், தூண்டியவர்கள், முன்னின்று நடத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க குழு அமைக்கப்படும் என  பேட்டியளித்துள்ளார். மேலும் போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளதாகவும், பள்ளிக்குள் இருந்த மாணவர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்தனர் என  அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்