கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கேரளாவின் ஆலுவா மகாதேவா கோவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் 3 மாவட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெரியாறு ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொச்சியில் உள்ள ஆலுவா மகாதேவர் கோவில் நீரில் மூழ்கியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளத்திற்கு 'ரெட்' அலர்ட் விடுத்துள்ளது. கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முதல் மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…