Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஸ்கூலுக்கு லேட் ஆச்சு :-பஸ்ஸும் வரல....மாணவியை காவு வாங்கிய ஆட்டோ...!

Bala August 11, 2022 & 09:08 [IST]
ஸ்கூலுக்கு லேட் ஆச்சு :-பஸ்ஸும் வரல....மாணவியை காவு வாங்கிய ஆட்டோ...!Representative Image.

கொல்லிமலையில் போதிய பஸ் வசதி இல்லாததாலும் பள்ளிக்கு தாமதமானதால் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த பிளஸ் 1 மாணவி தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், நரியங்கோடு பகுதியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ் என்பவர் சரக்கு  ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது பள்ளிக்கு செல்ல பஸ்சில் இடமில்லாததால் சாலை நிண்று கொண்றி கொண்டிருந்த பள்ளி மாணவிகள், பள்ளிக்கு தாமதமானதால் பிரகாஷ் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோவில் ஏறி சென்றுள்ளனர். அப்போது, அகிலா, 17, ரூபிகா, 16, ஆகியோர் தவறி சாலையில் விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த அகிலா, உயிருக்கு ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அகிலா பரிதாபமாக பலியானர். இந்த சம்பவம் மலைவாழ் மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 

போதிய பஸ் வசதி இல்லாததால், பள்ளி மாணவியர் சரக்கு ஆட்டோவில் செல்லும் அவலம் நீண்ட நாட்களாக நீடித்து வருவதாக மலைவாழ் மக்கள் புகார் கூறி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்