தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் - லாரியும் நோருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், அரியாலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், தூத்துக்குடியில் இருந்து காற்றாழை ஏற்றிச்செல்லக்கூடிய லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கடும் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இதில் இருவர் உடல் கருகி பலியான நிலையில், அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்ப்பட்டது.
இதனையடுத்து உயிரிழந்தவர்கள், லாரி ஓட்டுநர் உத்திர பிரதேசம் மாநிலம் டிகைடா பகுதியினை சேர்ந்த இந்திராமணிபால் என்பதும், கிளீனர் அதே மாநிலம் பிரதாப்கர் பகுதியினை சேர்ந்த பவன்பட்டேல் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…