கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூர் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இதனால் உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர். வெளியேறும் உபரிநீர் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொள்ளிடம் கரையோரம் உடைப்பு ஏற்படக்கூடிய இடங்களில் பொதுப்பணி துறையினர் சார்பாக மணல் முட்டைகள் தயார் செய்து அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றனர். கரையோர மக்களின் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் மணல் மூட்டைகளை 12 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…