தமிழகத்தில் எல்கேஜி வகுப்புகள் மூடப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக 2018ம் ஆண்டு முதல் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நிறுத்தப்படுவதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக அங்கன்வாடி குழந்தைகள் மையங்களை தரம் உயர்த்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்; ''தமிழ்நாட்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு வராமல் தனியார் பள்ளிகளுக்கு செல்ல அரசே வழிகாட்டுகிறது. இந்த வகுப்புகளை நடத்துவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சரி செய்து, மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை. அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…