மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்கலாம் ஆனால் முடிவெடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஆரம்ப முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகவில் எப்போதெல்லாம் அரசியலில் அசாதரான சூழல் ஏற்படுகிறது. அப்பொதெல்லாம் காவிரி விவகாரம் அல்லது மேகதாது அணை விவகாரம் பூதகரமாக வெடிப்பது வழக்கம். அந்தவகையில் தற்போது நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் போது மேகதாது அணை குறித்து விவாதிக்க உள்ளதாக கர்நாடக அரசு கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஒருவேளை மேகதாது அணை குறித்து விவாதிக்கப்பட்டால், காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்கலாம் ஆனால் முடிவெடுக்க கூடாது என தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேகதாது குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து ஆய்வு செய்து விவாதிக்கலாம் என்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள, நிலையில் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…