தமிழ்நாட்டில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் நடைபெறும் தேதியையும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் தற்போது பிஏ4, பிஏ5 வகை கொரோனா பரவி வருகிறது. இது வேகமாகப் பரவும் தன்மை உடையது. இதனால் ஜூலை 10ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…