சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த முத்து நாயக்கன்பட்டி பகுதியில் அரசு டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் அதிகப்படியான குடியிருப்பு, அரசு பள்ளி, வார சந்தை அம்மா பூங்கா போன்றவை செயல்பட்டு வருகிறது. அந்த மது கடையில் இருக்கும் போதை ஆசாமிகளால் பெண்கள், மாணவிகள் என்று அனைவருக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
எனவே, இந்த கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த மாதம் 7ஆம் தேதி, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் (பாமக) அவர்கள் தலைமையில் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் ஒரு மாதத்தில் இந்த கடை இடமாற்றம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
அவர்கள் கேட்ட ஒரு மாத அவகாசம் முடிந்தும் மது கடையை இடமாற்றம் செய்யாமல் இருந்தனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்களுடன் டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்ற சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் நாளை மதுக்கடையை திறக்க கூடாது என அரசு மதுபான கடை ஊழியர்களிடம் கூறினார். மேலும் அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர்களின் காலில் விழுந்து தயவு செய்து கடையை மூடுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…