இலங்கையில் தாளங்குடா பிரதேசத்தை அடுத்த மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர் பீதாம்பரம் ராஜன். இவர் அப்பகுதியில் இருக்கும் காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் குரங்கு ஒன்றுக்கு தினமும் உணவு அளித்து வந்துள்ளார். அந்த குரங்கு தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு ராஜன் வீட்டிற்கு வந்து உணவு வாங்குவது வழக்கமாக இருந்தது.
திடீரென்று அவர் உயிரிழந்ததால், அவரின் உடலை அஞ்சலி செலுத்த வைத்துள்ளனர் அவரின் குடும்பத்தினர். அனைவரும் பெரும் துக்கத்தில் இருந்த போது, தன்னுடைய நேரம் வரும் போது உணவு கேட்டு ராஜன் வீட்டிற்கு அந்த குரங்கு வந்துள்ளது. வந்து ரொம்ப நேரமாகியும் ராஜன் எழுந்திருக்காததால் அந்த குரங்கு மிகவும் சோகமாக அவர் உடலின் பக்கத்தில் அமர்ந்தது. ராஜனை எழுப்ப அந்தத் குரங்கு எவ்ளவோ முயற்சித்து பார்த்து ஆனால் அவர் முடியவில்லை.
அப்போது அவர் இறந்துவிட்டதாக தெரிந்துகொண்ட அந்த குரங்கு, அவரின் முகத்தை தொட்டு பார்த்து, கண்ணீர் விட்டது. மேலும் அவருக்கு முத்தம் கொடுத்து வருந்தியது. இந்த காலத்தில் மனிதர்னுக்கு மனிதன் எந்த உதவியும் செய்யாமல் சுயநலமாய் இருக்கும் உலகில், தனக்கு உணவளித்த நபர் இறந்துவிட்டார் என்று கண்ணீர் விடும் குரங்கை பார்த்து அனைவரும் வியந்தனர். இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதோடு, அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…