குரங்கம்மை நோய் பரவல் பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்ரிக்காவில் பரவ தொடங்கிய குரங்கு அம்மை நோய், கடந்த சில நாட்களாக ஐரோப்பாவிலும் பரவ தொடங்கியுள்ளது. அம்மை நோய் போல் காணப்படும் இந்த வகை வைரஸ் நோய், வேகமாக பரவக்கூடும் என தகவல் பரவியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு குரங்கம்மை நோய் பரவல் பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.
மேலும், தற்போது வரை 24 நாடுகளில் 400-க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…