கன்னியாகுமரியில் சிலருக்கு குரங்கு அம்மை அறிகுறி உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்தவர்களுக்கு குரங்கம்மை அறிகுறி காணப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இதனையடுத்து நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமனியன், தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை இல்லை என்றும் விமான நிலையங்கள் கேரளா எல்ல்லையில் கன்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர்கள் 4 பேரும் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது பரிசோதனை மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கன்னியாகுமரியில் சிலருக்கு குரங்கு அம்மை அறிகுறி உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை; குரங்கம்மை நோய் குறித்து யூகங்களுக்கு இடம் கொடுக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…