ஈரோட்டில் மாநகராட்சி பள்ளியில் ஏசி வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஈரோடு திருநகர் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையில் தன்னார்வ அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்கவிருந்தனர். அப்போது அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அருணாதேவி என்பவர் ஏசியை இயக்கியுள்ளார். அப்போது ஏசியில் இருந்து புகை வந்ததால் அதிர்சியடைந்த அவர், அலறியடித்துக்கொண்டு வெலியே ஓடினார். இதனையடுத்து தீப்பிடித்து ஏசி வெடித்து சிதறியதால் அந்த அறை முழுவதும் புகையாக காட்சியளித்தது. மேலும் அறையில் இருந்த சில ஆவனங்கள் மற்றும் கனினிகள் தீயில் கருகின. நல்வாய்ப்பாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர்.
இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக ஏசி வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…