உக்ரைனின் ஆயுத கிடங்கை குறிவைத்து ரஷ்யா துல்லிய ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
ரஷ்யப் படைகள் கிழக்குப் பகுதியை குறிவைத்து பீரங்கி தாக்குதல் நடத்துவதால் மேற்கத்திய நாடுகள், கனரக ஆயுதங்களை வேகமாக வழங்க வேண்டும் என உக்ரேனியத் தலைவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக உக்ரைனுக்கு உதவும் வகையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நவீன ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த ஆயுதங்கள் உக்ரைனின் தெர்நோபில் பகுதியில் உள்ள மிகப்பெரிய கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. இந்த கிடங்கை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் மூலம் நேற்று அழித்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மேலும் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கினால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…