மும்பை, கோவாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக அசாம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், மும்பையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளக்காடாக தேங்கி நின்றது. மேலும் ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து மும்பை, கோவாவில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை என்னும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…