நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ள திரவுபதி முர்மு, ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.
இன்று காலை 10.15 மணிக்கு புதிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் என்.வி.ரமணா உறுதிமொழி ஏற்பு நிகழ்வை செய்துவைக்க உள்ளார் . நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ள திரவுபதி முர்மு, ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். திரவுபதி முர்முவுக்கு ராம்நாத் கோவிந்த், குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு முன்னதாக முர்மு டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
நாடாளுமன்றத்தில் ராஜ்யசபாவின் நியமன எம்.பி.யாக இசைஞானி இளையராஜா இன்று பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…