அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் இடைநிற்றலை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஆண்டு தோறும், கல்வி உதவித்தொகை, மடிக்கனினி, சைக்கிள்கள் வழங்கி வருகிறது.
அதன்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படாத நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 11ம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கும் சேர்த்து, இந்த சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…